தமிழ்நாடு

குடும்பத்திற்குள்ளே நடந்த தகாத உறவுகள்: 10-ஆம் வகுப்பு சிறுவனின் உயிரை பறித்த கொடூரம் (18+ Only)

Published

on

விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர். இவர்களுக்கு சரத்குமார் என்ற மூத்த மகனும், சிவகுமார் எனும் இளைய மகனும், ஒரு மகளும் என மூன்று பேர் இருந்துள்ளனர். கேசவன் குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இதனால் 10 வகுப்பு படித்து வரும் சிவகுமார் தனது தாய், அண்ணன் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தான்.

சிவகுமாரின் தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றுவிட்டதால் தாய் பராசக்தி வேறு நபருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை மூத்த மகன் சரத்குமார் சிலமுறை நேரில் பார்த்துள்ளான். இதனால் சரத்குமாருக்கும் அவனது சித்திக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களது தகாத உறவை உடன்பிறந்த தங்கை பார்த்துவிட தங்கையையும் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான் சரத்குமார்.

வெளியில் இதனை சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளான் சரத்குமார். இதனால் அந்த பெண்ணும் அதனை வெளியே சொல்லவில்லை. ஒருநாள் சரத்குமார் தனது உடன்பிறந்த தங்கையுடன் தகாத உறவில் ஈடுபடுவதை தம்பி சிவகுமார் பார்த்துவிட்டான். இதனை அவன் வெளியே சொல்லிவிடுவான் என அஞ்சி தனது சித்தியுடன் சேர்ந்து சிவகுமாரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளான் சரத்குமார்.

இதனையடுத்து சரத்குமார், தனது சித்தி, தங்கை ஆகியோரை துணைக்கு அழைத்துக்கொண்டு சிவகுமாரை திட்டம் போட்டு வெளியே கூட்டிக்கொண்டு போய் அரிவாளால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான் சரத்குமார். இந்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவர அந்த கிராமமே அதிர்ந்துபோய் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version