செய்திகள்

கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மரணம் – திருவாரூரில் அதிர்ச்சி

Published

on

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் விருப்பப்பட்டால் மட்மே வரலாம் என அரசு கூறிவிட்டதால் சில மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. மாறாக நண்பர்களிடன் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து மரணமடைந்த சம்பவம் திருவாருரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் நேதாஜி நடிகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் அடித்த பந்தை மற்ற சிறுவன் தாவி பிடிக்க முயன்றான். அப்போது மாடியை ஒட்டி சென்ற மின் கம்பியில் அவனின் கை பிட்டு அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மரணம் அடைந்தான்.

இதைக்கண்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் சிறுவனை தூக்கி காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

 

Trending

Exit mobile version