செய்திகள்
பூங்கா சுவரில் சட்டை மாட்டி கழுத்து நெரிபட்டு பரிதாமாக பலியான சிறுவன்
தாம்பரம் குளக்கரை பகுதியை சேர்ந்த பெண்மனி கவிதா ( வயது-41) இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஆவார் இவரின் இரண்டாவது மகன் மெளலிக் ( வயது-12), இவர் வீட்டின் அருகில் முல்லை நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்கு அவருடைய உறவினர் பெண் புனிதாவுடன் பூங்காவிற்கு சென்றுள்ளார்,
அப்போது மதியவேளையில் பூங்கா பூட்டி இருந்தது பின்னர் இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர் பின்னர் சுமார் 4 மணி அளவில் மௌலிக் மட்டும் தனியாக பூங்காவிற்கு சென்று விளையாடி கொண்டு இருந்தார்.
அப்போது பூங்காவின் மதில்சுவர் மீது இரும்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது அதில் அவர் எகிரி குதிக்கும் போது எதிர்பாராத விதமாக அவருடைய பின் சட்டை மாட்டி கழுத்தை இறுக்கிய நிலையில் இறந்துள்ளார்
இதனை கண்ட அக்கம் பக்கதினர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தாம்பரம் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து விசாரனை நடித்தி வருகிறார்கள்.
பூங்காவிற்கு விளையாடச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..