உலகம்
புது கொரோனா அச்சுறுத்தல்… பிரிட்டன் பிரதமர் இந்தியா வருவது உறுதி!
![boris johnson 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/boris-johnson-1.jpg)
பிரிட்டனில் புது வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தல் இன்னமும் இருந்து வருகிறது.
இதனது தாக்கம் அதிகமான காரணத்தால் தான் பிரிட்டனில் தற்போது மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வருகிற இந்திய குடியரசு தினத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை ஏற்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.
வருகிற ஜ்னவரி 26-ம் தேதி குடியரசு தினத்துக்கு தலைமை ஏற்க போரிஸ் ஜான்சன் வருவாரா என்ற கேள்வி ஊடகங்களில் அதிகமான எழுப்பப்பட்டது. பிரிட்டனில் முழு தேசிய ஊரடங்கு அறிவித்துள்ள சூழலில் போருஇஸ் ஜான்சன் இந்திய வருகை என்பது சந்தேகம் தான் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த செய்திகளை எல்லாம் பிரிட்டன் அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.
புதிய கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் பிரிட்டனில் தேசிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருந்தாலும் இந்தியா குடியரசு தினத்துக்கு தலைமை ஏற்க போரிஸ் ஜான்சன் நிச்சயம் வருவார் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர்.