செய்திகள்
சென்னையில் புத்தகக்காட்சி விரைவில் துவக்கம் – அதிரடி அறிவிப்பு
![book festival - Bhoomitoday book festival](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/book-festival.jpg)
சென்னையில் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்குவது வழக்கம்.
இந்நிலையில், வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி சென்னையில் 45வது புத்தக கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் துவங்கவுள்ளது. 6ம் தேதி மாலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை துவங்கி வைக்கவுள்ளார். ஜனவரி 23ம் தேதி வரை இந்த புத்தக கண்காட்சி நடக்கவுள்ளது.
வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.