தமிழ்நாடு

சென்னையில் முக்கிய 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Published

on

சென்னியில் முக்கிய 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி நெருங்கி வரும் சூழலில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியத் தலைநகர் உட்பட பல முக்கிய மாநிலங்களின் தலைநகரங்களுக்குக் குண்டு மிரட்டல் உள்ளதாம்.

இன்டர்போல் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் சென்னை நகருக்கும் வெடிகுண்டு மிரட்டலை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் முக்கிய 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மிரட்டல் உள்ளதாம். பல சர்வதேச பணிகளுக்காக இந்த 5 நட்சத்திர ஹோட்டல்களில் தேர்வு, நேர்காணல்கள் நடக்கிறதாம். இந்த சூழலில்தான் அந்த ஹோட்டல்களுக்கு எல்லாம் மிரட்டல் வந்துள்ளதாம்.

சென்னையில் எந்தெந்த ஹோட்டல்கள் என குறிப்பிட்டு அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாம். கூடுதலாக சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு ஏற்ற வகையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version