வேலைவாய்ப்பு

பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு அதிகாரி வேலைவாய்ப்பு. அதற்குப் பின்வரும் தகுதிகளும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள்:

1) பாதுகாப்பு அதிகாரிகள் – 20 காலியிடங்கள்
2) தீயணைப்பு அதிகாரிகள் – 1 காலியிடம்

கல்வித் தகுதி:

பாதுகாப்பு அதிகாரிகள்:

ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். கணினி பாடத்திட்டத்தில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் படித்ததற்கான சான்றிதழ் அல்லது தகவல் தொழில் நுட்பம் அல்லது அதற்கு இணையாத பாடத்திட்டத்ஹ்டில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தீயணைப்பு அதிகாரி:

பி.இ., (தீயணைப்பு பொறியியல்) நாக்பூரின் தேசிய தீயணைப்பு சேவைக் கல்லூரியிலிருந்து அல்லது நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்புக் கல்லூரியிலிருந்து பிரதேச அலுவலர் பாடநெறி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1) பாதுகாப்பு அதிகாரிகள் – 25 முதல் 40 வயது வரை
2) தீயணைப்பு அதிகாரிகள் – 25 முதல் 35 வரை

தேர்வு செய்யும் முறை:

100 மதிப்பெண்கள் கொண்ட நேர்காணலில் பங்குபெற வேண்டும். அதிகபட்ச மதிப்பெண்களின் பட்டியலில் தேர்வு செய்யப்படுவார்கள். SC / ST / OBC / EWS / GEN பிரிவினர்களுக்கு இட ஓதுக்கீடு உண்டு. தகுதி பட்டியல் மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21/12/2020

தேர்வு கட்டணம்:

எஸ்.டி/எஸ்.சி பிரிவினர்களுக்குத் தேர்வு கட்டணம் ரூ.175. பொது மற்றும் பிற பிரிவினர்களுக்கு: ரூ.850/-

மேலும் விவரங்கள்: Final_Notice_Security_Officers_2020-21-3_05122020.pdf (bankofindia.co.in)

seithichurul

Trending

Exit mobile version