சினிமா செய்திகள்

’டான்’ படத்தை பார்க்க வந்த ரசிகர்களின் தூக்கம்: புளூசட்டை மாறன் பகிர்ந்த புகைப்படம்

Published

on

’டான்’ படத்தை திரையரங்குகளில் பார்க்க வந்த ரசிகர்கள் தூங்கியதாக ப்ளூ சட்டை மாறன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது .

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் இன்று அதிகாலை வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். முதல் காட்சி முடிந்ததும் என்ற படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் ஒரு ஜாலியான நல்ல எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படம் என்றும் இளைஞர்கள் குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் யார் நடித்த படம் என்றாலும் அந்த படத்தை கழுவி கழுவி ஊற்றும் பழக்கத்தை உடைய புளூசட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’டான்’ திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் தூங்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ரசிகர்களின் இந்த புகைப்படம் இடைவேளையின் போது எடுக்கப்பட்டது என்றும் அதிகாலை காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள் இடைவேளையின்போது தூங்கியதை புகைப்படம் எடுத்து விட்டு ’டான்’ படத்தை அவர் அவதூறு சொல்வதாக குற்றம்சாட்டியுள்ளனர் .

இன்னும் சிலரோ இது ’டான்’ படத்திற்கு வந்த ரசிகர்கள் கூட்டம் அல்ல என்றும் சர்காருவாரி பாட்டா படத்தின் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறிவருகின்றனர். மொத்தத்தில் இந்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version