சினிமா செய்திகள்

’ஆன்டி இந்தியன்’ படம் குறித்த வதந்தி: புளூசட்டை மாறன் விளக்கம்!

Published

on

ஆன்டி இந்தியன் படம் குறித்த வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் புளூசட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

பிரபல திரை விமர்சகர் புளூசட்டை மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் ’ஆன்டி இந்தியன்’. இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பதும் இந்த படத்திற்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் ஓடிடியில் வெளி வர இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வர இருப்பதாகவும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பதிவு செய்துள்ளனர்.

திரையரங்குகளில் ரிலீஸாகும் தினத்தில் இதுபோன்ற வதந்தி ஒன்று பரவுவதால் திரையரங்குக்கு சென்று பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து ப்ளூபுளூசட்டை ட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஆன்ட்டி இந்தியன் திரைப்படம் இருபத்தி எட்டு நாட்களுக்கு பின்னரே ஓடிடியில் ரிலீஸாகும் என்றும் எனவே தயவு செய்து யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஒரு மாதம் கழித்து ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.

Trending

Exit mobile version