இந்தியா
விமானத்தில் புகை பிடித்த ஐஸ்வர்யாராய் கைது.. போலீசார் தீவிர விசாரணை..!
விமானத்தின் கழிவறையில் புகை பிடித்த ஐஸ்வர்யாராய் என்ற பிளாக் ரைட்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பொதுவாக விமானத்தில் புகைபிடிப்பது கைது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் புகை பிடிப்பது என்பது விமானத்தில் தீ விபத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி சக பயணிகளுக்கு அசெளகரியமாக இருக்கும் என்பதால் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தில் சிகரெட் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் அனைத்து விமான நிலையங்களிலும் மின்னணு சிகரெட்டுகள் உள்பட சிகரெட் சாதனங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தடையை மீறி அவ்வப்போது விமான பயணிகள் விமானத்தின் கழிவறையில் புகைபிடிக்கும் போது அலாரம் சத்தம் காரணமாக பிடிபடுகின்றனர் என்பதும் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ராஞ்சியை சேர்ந்த பிளாக் ரைட்டர் ஐஸ்வர்யாராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தபோது புகை பிடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய விரும்பினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஆனந்த் குமார் என்பவர் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.