வணிகம்
ஜனவரி 4 முதல் சேவையை நிறுத்துகிறது பிளாக்பெர்ரி!
ஜனவரி 4 முதல் பிளாக்பெரி நிறுவனம் தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பிளாக்பெரி நிறுவனம் தனித்துவமான இயங்குதளத்தில் மொபைல் சேவையை செய்து வந்தது என்பதும் மிகவும் வசதியானவர்கள் மட்டும் பெருமைக்குரியவர்கள் மட்டுமே வைத்திருக்கும் மொபைல் போனாக பிளாக்பெரி இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் போனை அறிமுகம் செய்ததில் இருந்து பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மாற தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் ப்ளாக்பெரி நிறுவனம் வேறு வழியின்றி தனது மொபைல் போன் உற்பத்தியை நிறுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு முதல் மொபைல் உற்பத்தி இருந்து வெளியேறிவிட்ட பிளாக்பெரி நிறுவனம் அதன் பின்னர் ஏற்கனவே விற்பனை செய்த மொபைல் போன்களுக்கான சேவையை மட்டும் செய்து வந்தது.
இந்த நிலையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பிளாக்பெரி 10, 7.1 மற்றும் அதற்கு முந்தைய கிளாசிக் சாதனங்களுக்கான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தனித்துவமான இயங்கு தளத்திலிருந்து ஆண்ட்ராய்டு மென்பொருளுக்கு பிளாக்பெரி மாறிய நிலையில் தற்போது அந்த சேவையையும் நிறுத்திவிட்டது வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பெரும்பாலான பிளாக்பெரி வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.