செய்திகள்

ரூ.1000 கோடி கருப்பு பணம்.. சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை நிறுவனத்தின் மோசடி…

Published

on

தமிழகத்தில் நெல்லை, சென்னை, கோவை ,திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் செயல்படும் துணிக்கடை நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். சென்னையில் மட்டும் பல பகுதிகளில் இந்த கடையின் கிளைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் மொத்தம் 7 அடுக்குகள் இருக்கும். புடவை, ரெடிமேட், குழந்தைகள் உடை, விளையாட்டு பொருட்கள், ஆபரணங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், செருப்பு என பல வகையான பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு பல நூறு கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

saravana

இந்நிலையில், வருமான வரித்துறை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய கடைகளில் திடீரென நடத்திய சோதனையில் ரூ.100 கோடி வரை வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.10 கோடி ரூ.6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜவுளி, நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி மூலம் பொருட்கள் கொள்முதல் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version