தமிழ்நாடு
மோடிக்கு மீண்டும் கருப்புக்கொடி: வைகோ உறுதி!
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடிக்கு எதிரான நிலைப்பாட்டில் உக்கிரமாக உள்ளார். மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தும் வைகோ, வரும் மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட தயாராகிவிட்டார்.
மோடி மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வர உள்ள நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு நாட்களாக, பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டவேண்டாம் என கோரிக்கை வைத்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
அப்போது, மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு நிச்சயம் கறுப்புக்கொடி காட்டுவேன். மாயமான முகிலனை மீட்க அவரின் குடும்பத்தினர் புகாரளிக்க வேண்டும் என முதல்வர் கூறுவது பொறுப்பற்றதனம் என விமர்சித்தார்.