தமிழ்நாடு
கன்னியாகுமரியில் 8 வார்டுகளை கைப்பற்றிய பாஜக: தாமரை மலர்ந்துவிட்டதா?
![BJP 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/BJP-1-1.jpg)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது என்பதும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து அதிமுக மற்றும் பிற கட்சிகளும் வெற்றி வாய்ப்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் கூறிய நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 வார்டுகளை வென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கொல்லங்கோடு நகராட்சி 1வது வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும் அம்மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளிலும் இதுவரை 8 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் கப்பியரை பேரூராட்சிகள் 1-வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேல்முருகன் என்பவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார். சத்தியமங்கலம் நகராட்சி 8வது வார்டில் பாஜக ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.