தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடக்கிறது: திமுக-வை புகழும் பாஜக தலைவர் அண்ணாமலை!
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் நல்ல ஆட்சி நடத்தி வருகிறது என பாஜக-வில் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கோயம்புத்தூரில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நல்ல நேர்மையான அதிகாரிகளை பொறுப்பான பதவிகளில் பணி நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. இது பாராட்டுக்குரிய விஷயம். கடந்த 100 நாட்களில் இதன் மூலமாக தமிழ்நாட்டில் நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற முயற்சி வரவேற்கத்தக்கது. பாஜக தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராகத் தான் உள்ளது. திமுக நடத்தி வரும் ரெய்டுகள் ஒன்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர் ஒலிக்காது. திமுக பெட்ரோல் விலையைக் குறைக்கலாம். கொரானா இரண்டாம் அலையை சிறப்பாகக் கட்டுப்படுத்தி இருப்பதற்கான காரணமே திமுக அரசு மத்திய அரசு உடன் இணைந்து பணியாற்றியதே முக்கியக் காரணம்” எனக் குறிப்பிட்டுப் பேசினார்.