தமிழ்நாடு

முதல்வர் கொடுத்த ஊக்கம், டிஜிபி மீது விசாரணை: கவர்னர் தாக்குதல் குறித்து அண்ணாமலை ஆவேசம்

Published

on

தமிழக கவர்னர் மயிலாடுதுறை சென்றபோது அங்கு திமுகவினர் அவரது கான்வே மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஆவேசமாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘திமுக தொண்டர்கள் ஆளுநர் கான்வே மீது கொடிக்கம்பத்தை வீசி உள்ளனர் என்றும் கல்லை எடுத்து அடித்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டை கூறியுள்ளார் .

ஒரு மாநிலத்தின் ஆளுனருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எப்படி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் .

ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திமுக தலைவர் கொடுத்த ஊக்கத்தினால் நடந்த தாக்குதல் என்றும் முதலமைச்சர் கண்ணை கட்டிக் கொண்டு செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதயுள்ளதாகவும் தமிழக டிஜிபி நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார். மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அல்லது பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version