இந்தியா

பாஜக எம்பி மர்ம மரணம்: தற்கொலையா? என விசாரணை

Published

on

பாஜக எம்பி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மரணத்திற்கு தற்கொலை காரணமா என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த பாஜக எம்பி ராம் ஸ்வரூப் சர்மா டெல்லியில் தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென அவர் வீட்டில் மரணமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

காவல்துறையினர்களின் முதல்கட்ட விசாரணையின் ராம் ஸ்வரூப் சர்மா அவர்கள் தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் கொலையா என்ற ரீதியிலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே மரணத்திற்கான உரிய காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.

கடந்த சில மாதங்களாக எம்பி ராம் சரண் சர்மா உடல்நலமில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக எம்பி மறைவை அடுத்து மக்களவை நடவடிக்கைகள் இன்று சில மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது என்பதும், உறுப்பினர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version