தமிழ்நாடு

மீ டூ போல ஆண்கள் ஆரம்பித்தால் பெண்கள் நடமாட முடியாது: பொன்னார் காட்டம்!

Published

on

மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லி வருகின்றனர். இதில் நாடுமுழுவதும் பல முக்கிய தலைகள் உருளுகிறது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் மீ டூ இயக்கத்துக்கு எதிராக சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக பாஜக மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மீ டூ இயக்கத்தின் மூலம் ஏசியன் ஏஜ் ஊடகத்தின் பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி அளித்த புகாரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மூலம் நாடு முழுவதும் மீ டூ இயக்கத்தின் தாக்கம் தெரிந்தது. தொடர்ந்து இந்த மீ டூ இயக்கத்தின் மூலம் பல பாலியல் தொல்லைகள் வெளிவந்தவாறு உள்ளது.

இந்நிலையில் இதற்கு ஆரம்பத்திலிருந்து பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். இது தொடர்பாக கரூரில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மீ டூ என்பது வக்கிர புத்தியுடைய பெண்களின் எண்ணம். மீ டூ போல ஆண்கள் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தால் நமது வீட்டுப் பெண்கள் நடமாட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

Trending

Exit mobile version