செய்திகள்
பாஜகவுக்கு ஓட்டு போட்டா ரூ.5 லட்சம்…போலி செக்கை கொடுத்து மோசடி…..
![arrest - Bhoomitoday arrest](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/arrest.jpg)
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒருபக்கம், அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பாஜகவுக்கு வாக்களித்தால் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு செய்து கொடுக்கப்படும் எனக்கூறி பாஜகவினர் சிலர் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்துள்ளது.
நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டா ரூ. 5 லட்சத்துக்கான காப்பீடு இலவசம் எனக்கூறி இந்த செக்கை பலரிடமும் அவர்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த செக்கில் புதுமைப்பெண் வங்கி என பெயர் அச்சிடப்பட்டிருந்தது. பொதுமக்கள் என நினைத்து திமுக சிலரிடம் அவர்கள் இந்த செக்கை கொடுக்க அவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, செக் மோசடி தெரியும்.. இது என்னடா செக்கே மோசடியா இருக்கு என நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.