இந்தியா
வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்: ஸ்டாலின் குறித்து பாஜக பிரபலம் டுவிட்!
வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டதா? முடக்கப்பட்டதா? என்பது பற்றி எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை என பாஜக பிரபலம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டசபை முடக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் கடுமையான வார்த்தைகளில் டுவிட் ஒன்றாஇ பதிவு செய்திருந்தார். இதற்கு மேற்குவங்க ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று மேற்குவங்க சட்டமன்றம் முடக்கப்பட்டது என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் சந்தோஷ் தனது டுவிட்டரில் வாரிசு அரசியலில் ஈடுபடும் நபர்கள் எதற்கும் தயாராக இல்லை, எதையும் தெரிந்து கொள்ளவும் முயற்சிப்பது இல்லை என்பதையே இந்த முக ஸ்டாலினின் டுவிட் காட்டுகிறது என்றும், இவர்கள் சொல்வதை எல்லாம் மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர் என்றும் ஆனால் நிலைமை அப்படி அல்ல என்றும் தமிழ்நாட்டிற்கு இதைவிட நல்ல ஆட்சி நிர்வாகம் தேவை என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
The very tweet of @mkstalin shows how ill prepared & less informed these dynasts are … In the past they made people believe what they say . Now they are left to search for their clothes in public by their foolishness . Pity them . Tamilnadu deserves better Governance . https://t.co/ieWzIgUtpv
— B L Santhosh (@blsanthosh) February 13, 2022