தமிழ்நாடு

அமித்ஷாவிற்கு பதிலாக சென்னை வரப்போவது யார் தெரியுமா?

Published

on

துக்ளக் பத்திரகை விழாவில் கலந்துகொள்ள, அமித்ஷாவிற்கு பதிலாக பாஜக தலைவர் ஜே.பி நட்டா சென்னை வரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழா அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா வரும் 14 ஆம் தேதி சென்னை வருவதாக இருந்தது. அன்றைய தினமே அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசப்போவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென அவரது வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில், தற்போது அமித்ஷாவிற்குப் பதிலாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்பார் என்று செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் மே, ஜூன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி, அதிமுகவுடன் பேச்சவார்த்தையும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு அமித்ஷா சென்னை வந்த போது, அவர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version