Connect with us

தமிழ்நாடு

வேலூர் தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜக தான்: ஏ.சி.சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!

Published

on

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் வேலூர் தேர்தலில் தான் தோற்றதற்கு பாஜக கொண்டு வந்த மசோதாக்கள் தான் காரணம் என ஏ.சி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வேலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம், வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக என்ஐஏ சட்டத்திருத்த மசோதா வந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்னர் முத்தலாக் சட்டம் வந்தது. தேர்தல் நாளன்று காஷ்மீரின் 370-வது சட்டப் பிரிவை நீக்கும் மசோதா கொண்டுவரப்பட்டது. அன்று 4 மணி வரையிலும் சிறுபான்மையின மக்கள் வாக்களிக்கவில்லை. அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாகவே இருந்தனர். ஆனால், அதன் பிறகு சில தலைவர்கள் களமிறங்கி அவர்களை வாக்களிக்க வைத்துள்ளனர்.

இஸ்லாமிய மக்கள்தான் திமுகவுக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். வாணியம்பாடியில் 22,000 வாக்குகள் திமுகவுக்குச் சென்றது. அதுபோலவே ஆம்பூர் தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் 300 வாக்குகள் வரை அதிகம் பெற்றோம். ஆனால், குறிப்பிட்ட ஆறு வார்டுகளில் மட்டும் திமுக 30,000 வாக்குகள் பெற்றது. இந்த இரண்டும் திமுகவின் வெற்றிக்கு வலுவாக இருந்தது. இல்லையெனில் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்கள் என்றார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ஏ.சி.சண்முகம் ஏன் அவ்வாறு சொல்கிறார் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். 370-வது பிரிவை நீக்கியதற்காக அந்தப் பகுதி மக்கள்கூட வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆகவே ஏ.சி.சண்முகம் சொல்வது தவறு. 370 நீக்கம் ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்கான வாக்குகளை அதிகப்படுத்தி தந்திருக்கும் என்றார்.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!