உலகம்

லோக்சபாவில் பாஜகவை கோபமாக சீண்டிய எம்.பி தம்பிதுரை.. தெறி பேச்சு!

Published

on

டெல்லி:பாஜக கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டு வந்த எந்த திட்டமும் வெற்றி பெறவில்லை, எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

லோக்சபாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து அதிமுக எம்.பி தம்பிதுரை பேசியது பெரிய வைரல் ஆகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் தனி நபராக தம்பிதுரை பாஜகவிற்கு எதிராக பேசி வருகிறார்.

கடந்த முறை ரபேல் ஒப்பந்தம் குறித்து தம்பிதுரை பேசியது பெரிய விவாதத்தை கிளப்பியது. தற்போது பாஜகவின் அனைத்து திட்டங்களையும் மொத்தமாக விமர்சித்து தம்பிதுரை பேசியுள்ளார்.

அவர் தனது பேச்சில், பாஜக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. பணமதிப்பிழப்பின் பயன் என்ன? ஏற்பட்டது. பணமதிப்பிழப்பால் பலரின் வாழ்வாதாரம் பாதித்தது. பணமதிப்பிழப்பால் சிறு, குறு தொழில்கள் மொத்தமாக முடங்கியது.

மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இப்படித்தான் மாநில அரசுகளுக்கு எதிராக செயலபட்டது. கடைசியில் தற்போது மாநில கட்சிகளை நம்பும் நிலைக்கு காங்கிரஸ் சென்று இருக்கிறது. பாஜகவும் அந்த நிலைக்கு செல்லும், என்றார்.

seithichurul

Trending

Exit mobile version