தமிழ்நாடு

பாஜக மூத்த தலைவர் ஹெச் .ராஜா கைது: காரணமின்றி கைதானதாக டுவிட்!

Published

on

பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தான் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெச் ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனியில் உள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வழிபாட்டில் கலந்துகொள்ள தான் சென்றதாகவும் அவ்வாறு கொண்டிருக்கும் வழியில் திடீரென கைது செய்யப்பட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பழனி இடும்பன் குளம் நிகழ்ச்சிக்காக வந்த தன்னை கைது செய்தது ஏன் என்றும் இந்து மதத்தில் பிறந்தது தவறா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் எஸ்பி மகாராஜா போல் நடந்து கொள்கிறார் எனவும் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

பழனியில் நடைபெற இருந்த மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வந்ததாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version