தமிழ்நாடு
ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க பாஜக வறுபுறுத்தியது.. பிரான்ஸ் பரபரப்பு!
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.அதன்படி மீடியாபார்ட் என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும்.
இல்லையென்றால் ஒப்பந்தம் நடக்காது என்று விதிமுறைகளை மாற்றியதாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்த ஆதாரங்களை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. டஸால்ட் நிறுவனம் ஹின்ஸ்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருந்தது. அதை நிறுத்தி பிரதமர் மோடி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளிக்க சொன்னது அம்பலம் ஆகியுள்ளது.