தமிழ்நாடு
ரஜினி ஒரு மேம்போக்கான அரசியல்வாதி: விளாசும் விசிக நிர்வாகி!
![Rajini 7 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Rajini-7.jpg)
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்த ரஜினி, ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் என்று கேள்வி கேட்டப்பட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பேன். எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த எழு பேர் என்று கேட்டேன் என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல தமிழ் இணையதளத்துக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை, ரஜினியின் பதில் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை. ரஜினி அரசியலுக்கு வரும்போது யார் வேண்டுமானாலும் வரலாம் என்று வரவேற்றோம். பின்னர் ஆன்மீக அரசியல் என்றதும் பாஜகவின் இன்னொரு முகமாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது.
அரசியல் இயக்கம் தொடங்க உள்ளவர் மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து கவனிப்பதாக தெரியவில்லை. களத்திற்கு வந்து போராடக் கூடிய போராளியாகவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட மேம்போக்கான அரசியல்வாதிகளை, கவர்ச்சியை மட்டுமே வைத்து, அதிகாரத்தை நோக்கி நகரக்கூடியவர்களை தமிழக மக்கள் அடையாளம் காண வேண்டும் என்றார்.