தமிழ்நாடு

நீட் தேர்வை ஆதரிப்பதால் குண்டு வீச்சு என்பது நகைச்சுவை: பாஜக தலைவர் அண்ணாமலை

Published

on

நீட் தேர்வை ஆதரிப்பதால் குண்டு வீசியதாக கூறுவது சரியான நகைச்சுவை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதனை அடுத்து சிசிடிவியில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நந்தனத்தை சேர்ந்த பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதால்தான் பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு பேசினேன் என்று கூறியிருந்தார். அவரது இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

இந்த நிலையில் குண்டு வீசியவர் வாக்குமூலம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வை ஆதரிப்பதாக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச படுவதாகக் கூறுவது சரியான நகைச்சுவை என்று கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version