தமிழ்நாடு

அண்ணாமலை ஆர்ப்பட்டம் அறிவித்தவுடன் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கோரிக்கை விடுத்ததோடு இதுகுறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில் முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்தது என்பதும் இதில் பலர் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5000 நிவாரண நிதி உதவி செய்ய வேண்டுமென்றும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்தார்.

அண்ணாமலையின் இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களில் வரும் 19-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் கூடவிருப்பதாகவும், இந்தக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version