Connect with us

இந்தியா

ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் தண்ணீர்: பிஸ்லெரி அதிரடி திட்டம்!

Published

on

மொபைல் ஆப் மூலம் 24 மணி நேரத்தில் தண்ணீர் டோர் டெலிவரி செய்யப்படும் என பிரபல மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் மினரல் வாட்டரை பயன்படுத்த தொடங்கி விட்டனர் என்பதை அடுத்து மினரல் வாட்டரின் தேவை அதிகரித்துள்ளது. இதனை கணக்கில் கொண்டு முன்னணி மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லெரி, ஆப் மூலம் மினரல் வாட்டரை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக புதிய ஆப் ஒன்றை தயார் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரத்யேக ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தண்ணீர் தேவையை ஆர்டர் செய்தால் வீட்டு வாசலில் 24 மணி நேரத்தில் பெறமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெலிவரி செய்யும் நிறுவனத்துடனும் பிஸ்லரி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு இடையில் தங்குதடையின்றி ரெகுலராக தண்ணீர் தேவைப்படுபவர்களுக்கு புதிய சந்தா முறையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் இந்த ஆப் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஸ்லரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியபோது ’வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் பேக் செய்யப்பட்ட குடிநீரை டெலிவரி செய்யும் முதல் நிறுவனமாக எங்கள் நிறுவனம் மாறியுள்ளது என்றும் இந்த சேவையை பயன்படுத்த விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆப் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டு வாசலுக்கே பிஸ்லரி தண்ணீர் வரும் என்ற இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!