தமிழ்நாடு

தமிழகத்தில் பரவுகிறதா பறவைக்காய்ச்சல்?

Published

on

கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் தமிழகத்தில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வடமாநிலங்களில் இருந்து பறவைக்காய்ச்சல் தென்மாநிலங்களுக்கும் பரவ துவங்கி உள்ளது.  கேரளாவில் கோட்டையம் மற்றும் ஆலப்புழ ஆகிய பகுதிகளில் பறவைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. தற்போது  கேரளாவில் பறவைகாய்ச்சல் பரவி வருகின்றது. அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு உள்ளது. இதன் ஓரு பகுதியாக கேரளாவில் இருந்து இறைச்சிக்காக  தமிழகம் கொண்டுவரப்படும் பறவைகள் மற்றும் முட்டை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – கேரளா எல்லைப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பிற்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் முடியாத நிலையில், புதிதாக பரவியிருக்கும் பறவைக்காய்ச்சல் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் என்பது சாத்தியம் இல்லாத ஓன்று என்று கால்நடைநிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version