இந்தியா
பறவைக் காய்ச்சல் எதிரொலி.. டெல்லியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு தடை!
பறவைக் காய்ச்சல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டெல்லி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாநகராட்சிகள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை விற்க, சேமித்து வைக்க தடை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளன.
உணவகங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சி உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி வடக்கு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோழி இறைச்சி குறித்து யாரும் பயப்பட வேண்டாம். நன்கு சமைக்கப்பட்ட கோழி இறைச்சிகளைச் சாப்பிடலாம் என்று டெல்லி சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்ட அதே நேரத்தில் வடக்கு டெல்லி கார்ப்ரேஷன் கோழி இறைச்சிகளைத் தடை செய்வதாக உத்தரவிட்ட அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இறந்த பறவைகளை வெறும் கையில் தொட வேண்டாம். பறவைகள் எங்காவது இறந்து கிடந்தால் 23890318 என்ற எண்ணிற்கு அழைக்கவும். 70 டிகிரி செல்ஷியலில் 30 நிமிடம் வரை வேக வைத்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை அட்டும் சாப்பிடவும். முழுமையாக வேகாத இறைச்சி, ஆப்-பாயில், முழுமையாக வறுக்கப்படாத முட்டைகளைச் சாப்பிட வேண்டாம் என்று எல்லாம் டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என்று தற்போது வரை எந்த அறிவியல் பூர்வ தரவுகளும் இல்லை. எனவே மாநிலங்கள் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க தேவையில்லை என்று மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேவையில்லாத தடைகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.