உலகம்

பள்ளிக்குள் புகுந்து சிறுமிகளை வன்புணர முயற்சி.. பீகாரில் மர்ம கும்பல் வெறிச்செயல்

Published

on

பாட்னா: பீகாரில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருக்கும் மாணவிகளை வன்புணர முயற்சி செய்து தாக்கி இருக்கிறார்கள்.

திரிவேணிகஞ்ச் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள கஸ்தூரிபா தனியார் பெண்கள் பள்ளியில், மர்ம கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்து சிறுமிகளை தாக்கி உள்ளது.

இதில் பல சிறுமிகள் மோசமாக காயமடைந்து இருக்கிறார்கள். அங்கு 50 க்கும் அதிகமான ஆண்களை அழைத்து வந்துள்ளனர்.

உள்ளே வந்த இந்த கும்பல் அங்கிருக்கும் சிறுமிகளை மோசமாக தாக்கி உள்ளனர். அதோடு கும்பலாக சேர்ந்து அந்த சிறுமிகளை வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளனர்.

கடைசியில் ஊர் மக்கள் அந்த பகுதிக்கு வந்தவுடன், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து ஓடியுள்ளது. இந்த நிலையில் இந்த மாணவிகள் எல்லோரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். .

 

 

 

seithichurul

Trending

Exit mobile version