இந்தியா

15 நாட்களுக்கு ஒருமுறை மனைவியை மாற்றும் கணவர்: காவல்துறையின் பஞ்சாயத்தில் முடிவு!

Published

on

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்தார். திருமணம் ஆன பின்னர் தான் அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து இரண்டாவதாக திருமணம் செய்த பூர்ணிமா என்ற பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அந்த இளைஞரையும் அவருடைய இரண்டு மனைவிகளையும் அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையின்போது இரண்டு மனைவிகளும் அவருடன் குடும்பம் நடத்துவதற்கே விரும்பினார்கள். இதனை அடுத்து அந்த இளைஞர் மாதத்தின் முதல் பதினைந்து நாட்கள் முதல் மனைவியுடனும் இரண்டாவது 15 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார் .

இதுகுறித்து ஆகிய மூவருக்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது, இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version