சினிமா
ஐஸ்வர்யாவுக்கு பல்பு கொடுத்த பிக்பாஸ்.. ரித்விகா தான் வின்னர்!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில், டைட்டில் வின்னராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 லட்சம் ரூபாயுடன் பிக்பாஸ் கோப்பை அவருக்கு வழங்கப்பட்டது. ரன்னர் – அப்பாக ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார்.
பிரம்மாண்ட அரங்கில் நடத்தப்பட்ட நிறைவு நிகழ்ச்சியில், பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் பாடல்களுக்கு நடனமாடினர். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலிருந்து, பிக்பாஸ் ஷோவை கலாய்த்து ஒரு காமெடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் பின்னர் வீட்டில் இருந்த மூவரில், விஜயலட்சுமியை பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ்வை வீட்டிற்கு அனுப்பி, அவர் மூலம் எலிமினேஷன் செய்தனர்.
அதையடுத்து, ஓவியாவின் மாஸ் என்ட்ரியில், நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறியது. ஓவியா, கமலுக்கே குறும்படம் ஒன்றை போட்டுக் காட்ட, ரசிகர்கள் ஆர்ப்பறித்தனர். பின்னர், டைட்டில் வின்னராக ஐஸ்வர்யாவை ஓரங்கட்டிவிட்டு, தமிழ் பொண்ணான ரித்விகாவை தேர்வு செய்தார் கமல்.
பிக்பாஸ் சீசன் 2 டைட்டிலை வென்ற ரித்விகாவுக்கு ரூ.50 லட்சம் பரிசும், பிக்பாஸ் ஷோவின் கண் சிம்பல் பதித்த கோப்பையும் வழங்கப்பட்டது.