Connect with us

இந்தியா

சிறுநீரகத்தை விற்று தந்தையின் கடனை அடைக்க முயன்ற மாணவி.. லட்சக்கணக்கில் ஏமாந்த சோகம்!

Published

on

தந்தைக்கு தெரியாமல் அவரது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்த பணத்தை திரும்ப டெபாசிட் செய்வதற்காக சிறுநீரகத்தை விற்க முயன்ற மாணவி ஒருவர் லட்சகணக்கில் சைபர் குற்றவாளிகளிடம் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் சேர்ந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் அவரது தந்தை கைச் செலவுக்காக தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்துள்ளார். அந்த டெபிட் கார்டின் மூலம் மாணவி தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து கடிகாரங்கள், ஆடைகள் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்கி உள்ளார்.

இதனை அடுத்து தந்தை தனது வங்கி கணக்கை சரி பார்க்கும் முன்னர் அந்த பணத்தை திரும்ப செலுத்திவிட வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இதற்காக அவர் தனது சிறுநீரகத்தை விற்று தந்தையின் அக்கவுன்டில் பணம் போட திட்டமிட்டார்.

இதுகுறித்து ஆன்லைனில் ஒரு விளம்பரத்தைப் பார்த்த மாணவி, அந்த விளம்பரத்தில் சிறுநீரகம் தானம் செய்பவர்களுக்கு ரூ 7 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் உள்ள நபரை அவர் தொடர்பு கொண்டபோது டாக்டர் பிரவீன் ராஜ் என்பவர் பேசுவதாகவும் சிறுநீரகம் பொருத்த மாக இருந்தால் ஆரம்ப தொகையாக 3.5 கோடி வழங்கப்படும் என்றும் சிறுநீரகம் பெற்றவுடன் மீதி தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மாணவி தனது மருத்துவ அறிக்கை உள்பட அனைத்தையும் சமர்ப்பித்த பின்னர் அவர் சிறுநீரகத்தை தானம் செய்யத் தகுதியுடையவர் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிறுநீரகம் தானம் செய்வதற்கு முன்னர் ஒரு சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அதற்காக 16 லட்ச ரூபாய் அந்த மாணவி கட்ட வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மாணவி தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து 16 லட்சம் எடுத்துக் கட்டியுள்ளார். அதன்பிறகு அவர் டெல்லிக்குச் சென்று சிறுநீரகத்தை தானத்தை வழங்கி விட்டு பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர் கூறியபடி அந்த நர்சிங் மாணவி டெல்லி சென்ற போதுதான் அது ஒரு போலியான முகவரி என்று தெரியவந்தது. இதனை அடுத்து அவர் காவல் துறையை அணுகி தான் 16 லட்ச ரூபாய் ஏமாந்ததை தெரிவித்த நிலையில் காவல்துறையினர் தற்போது அந்த மோசடி நபரை கண்டுபிடிப்பதற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது தந்தையிடம் கூறப்பட்ட நிலையில் மாணவி தந்தைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகவும் அதன்பின்னர் மாணவி அவருடைய தோழிகளில் ஒருவர் வீட்டில் தங்கியிருந்ததை கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!