சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட் முதல் போட்டியாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக ராஜூ தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாகவும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வெளியான தகவலை பார்த்தோம்.

பிக்பாஸ் 5 சீசன்களில் உள்ள போட்டியாளர்களில் சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் சினேகன், ஓவியா, அனிதா, வனிதா, தாமரை, பரணி உள்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் தான் கவிஞர் சினேகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சினேகன் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆரவ், டைட்டில் வின்னர் ஆனார் என்பதும் சினேகனுக்கு 2வது இடமே கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் தோத்துப்போன வெறுப்போட, திரும்ப வர்றான் நெருப்போட’ என்ற கவிதையுடன் அறிமுகமாகும் சினேகன் விட்டதைப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இன்று முதல் தினசரி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் அறிவிப்பை ஹாட்ஸ்டார் வெளியிட உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Trending

Exit mobile version