சினிமா செய்திகள்

தாமரை காயினை ஆட்டைய போட்ட ஸ்ருதி: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

Published

on

பிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாத வகையில் காயின்கள் என்ற சிறப்பு அம்சம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த காயின்களை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் அல்லது வேறு ஒருவரை நாமினேஷனில் சிக்க வைக்கலாம் என்பதும் அதேபோல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவரை மாற்றி தன்னையோ அல்லது வேறு ஒருவரையோ கேப்டனாக மாற்றிக் கொள்ளலாம் என்ற சக்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த சக்தி வாய்ந்த காயின்களை தாமரைச்செல்வி, வருண், இசைவாணி, அபினய் மற்றும் பாவனி ஆகிய 5 பேர்கள் வைத்து உள்ளனர் என்பதும் இவர்கள் எப்போது இந்த காயின்களை பயன்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த காயின்களை வேறு யாராவது திருடி விட்டால் அவர்களுக்கு அந்த காயின்கள் சொந்தமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாமரைச் செல்வி தனது காயினை பாத்ரூமில் வைத்து இருந்த நிலையில் சுருதி அந்த காயினை திருடி விட்டார்.

இதனால் சுருதியுடன் சண்டைக்கு செல்லும் தாமரையை சுருதி சமாதானப்படுத்துகிறார் இது ஒரு கேம், காயினை திருடலாம் என்பது பிக்பாஸ் வழங்கிய விதி. எனவே இதற்கு டென்ஷன் ஆகாதீர்கள் என்று கூற தாமரைச்செல்வி தனது காயின் பறிபோனதை நினைத்து கதறி அழும் காட்சியோடு இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version