சினிமா செய்திகள்

தாமரை செல்வி – நமீதா மோதல் என்ன ஆச்சு? நேற்றைய எபிசோடில் ஆச்சரியம்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் தாமரைச்செல்வி மற்றும் நமீதா ஆகிய இருவருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்ட நிலையில் இறுதியில் இருவரும் சமாதானம் ஆகியது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 நாட்களாக கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இதுவரை போட்டியாளர்களுக்கு இடையே எந்தவிதமான பிரச்சனையும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று திடீரென தாமரைச்செல்வி மற்றும் நமீதா இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

விளையாட்டாக பிரியங்கா, தாமரைச்செல்வி, நமீதா உள்பட ஒரு சிலர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தாமரைச்செல்வி கூறிய ஒரு விஷயம் நமீதாவின் மனதை பாதித்தது. இதனை அடுத்து தாமரைச்செல்வியை சும்மா விடமாட்டேன் என்றும் அவர் சிரித்து சிரித்து எல்லோரையும் ஏமாற்றுகிறார் என்றும் அவரை அசிங்க அசிங்கமாக கேட்பேன் என்றும் கடுமையான சொற்களை பயன்படுத்தினார்.

இதனிடையே நமிதா – தாமரைச்செல்வி இடையே உள்ள பிரச்சனையை சமாதானம் செய்ய வந்த இமான் அண்ணாச்சியிடமும் நமீதா சமாதானத்துக்கு மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நமீதாவிடம் ஏற்கனவே மன்னிப்பு கேட்ட தாமரைச்செல்வி அதன் பின்னரும் நமீதா சமாதானமாகாததை அடுத்து பிரியங்காவிடம் புலம்பிக் கொண்டே இருந்தார்.

நள்ளிரவுக்கு மேல் ஒரு கட்டத்தில் அவர் பெட்ரூமை விட்டு வெளியே வந்து கார்டன் ஏரியாவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நமித அங்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த தாமரைச்செல்வி எழுப்பி உன்னை நான் மன்னித்து விட்டேன் நீங்கள் உள்ளே போய் படுங்கள் என்று கூறினார். இதனை அடுத்தே தாமரைச்செல்வி உள்ளே போய் படுத்தார். அப்போது டீ போட்டு கொடுக்கின்றேன், குடிக்கின்றீர்கள? என்று நமிதா கேட்க தாமரைச்செல்வி ஓகே சொல்ல அவருக்கு டீ போட்டு கொடுத்தார் நமீதா.

உங்கள் தங்கச்சியிடம் இருப்பது போல் என்னிடம் நீங்கள் அன்பாக இருங்கள் என்று நமிதா கூறியதை அடுத்து இருவரும் சமாதானம் ஆகி விட்டனர். முட்டல் மோதலில் தொடங்கிய தாமரைச்செல்வி நமீதா இறுதியில் ஒன்று சேர்ந்ததை அடுத்து, சண்டையை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமும் மற்ற பார்வையாளர்களுக்கு திருப்தியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version