சினிமா செய்திகள்

நம்மள ஒதுக்குறவங்க எல்லாம் நம்ம செதுக்குறாங்க: பிக்பாஸ் இசைவாணி

Published

on

நம்மை ஒதுக்குபவர்கள் எல்லாம் நம்மை செதுக்குகிறார்கள் என பிக்பாஸ் இசைவாணி தனது சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று நான்காவது நாளாக நடைபெறவிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் விஜய் டெலிவிஷனின் ட்விட்டர் பக்கத்தில் மூன்று புரமோ வீடியோக்கள் வந்து கொண்டிருக்கும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இன்று வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் கலர் குறித்து சுருதி மற்றும் இசைவாணி பேசுகின்றனர். என்னுடைய கலரை வைத்து நிறைய பேர் கேலியும் கிண்டலும் செய்தார்கள் என்றும் நம்மை பல பேர் ஒதுக்கினார்கள் என்றும் கூறினார். அப்போது இசைவாணி ’நம்மை ஒருவர் ஒதுக்குகிறார்கள் என்றால் அவர்கள் நம்மை செதுக்குகிறார்கள் என்று அர்த்தம், ஒருவரை ஒதுக்கினால் அந்த ஒதுக்கப்பட்டது மட்டும்தான் தனியாக தெரியும் என்று ஆமோதிக்கிறார்.

மேலும் நான் அழவே கூடாது என்று நினைப்பேன், ஆனால் அழுதால் இன்னும் வலிமையாக என்பதால் அழுதுவிடுவேன் என்று சுருதி கூறும் போது ’அழுகை வந்தால் அழுது விட வேண்டும், மனதிலேயே வைத்துக் கொள்ளக்கூடாது என்று இசைவாணி அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.

பல கஷ்டங்கள் அவமானங்கள் ஆகியவற்றை அனுபவித்து வந்த அனுபவசாலிகளான இளம் பெண்கள்தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் என்பதால் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version