சினிமா செய்திகள்

நாமினேஷனில் சிக்கிய 10 பேர்: ஒருவர் இன்றே தப்பித்துவிடுவாரா?

Published

on

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று நாமினேஷன் படலம் நடக்கும் என்பதும் அதில் அந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறும் ஒருவரை தேர்வு செய்வதற்காக நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்பது தெரிந்ததே.

அந்தவகையில் நேற்று நாம் நாமினேஷன் நடந்தபோது இதில் 10 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வார நாமினேஷன் பெற்றவர்கள் பெயர்கள் பின்வருவன: அபிஷேக், பாவனி ரெட்டி, அக்சரா, இசைவாணி, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, ப்ரியங்கா, அபினய், ஐக்கி, தாமரை.

இந்த நிலையில் இந்த 10 போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெறுபவர் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதும் சனிக்கிழமை ஒரு சிலர் காப்பாற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாமினேஷனில் இருந்து இன்றே ஒருவர் காப்பாற்றிக் கொள்ளலாம் என பிக்பாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்றைய முதல் புரமோ வீடியோவில் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இந்த டாஸ்க்கில் ஐந்து விலைமதிக்க நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நாணயங்களை பிக்பாஸ் போட்டியாளர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பையும் மீறி இந்த நாணயங்களை அதிகமாக எடுப்பவர்கள் நாமினேஷன் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார். இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து யார் காப்பாற்றப்பட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version