டிவி

பிக்பாஸ் சீசன் 4-க்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் நடிகைகள்!

Published

on

பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள நடிகர், நடிகைகள் கொரோனா அச்சம் காரணமாக தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து 4வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமல் ஹாஅன் தொகுத்து வழங்க உள்ளார்.

வழக்கமாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, நடப்பு ஆண்டு கொரோனா காரணமாக தாமதமாக செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பிக்பஸ் சீசன் 4-ல் சீரியல் நடிகை ஷிவானி, பிரபல நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் ஜித்தன் ரமேஷ், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்று, இரண்டு போல 3ம் சீசன் நன்றாக இல்லை என்று கூறப்பட்டது. இந்த முறை கொரோனா ஊரடங்கு போன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகள் எல்லாம் இடம்பெற்று பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கலைக்கட்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version