சினிமா செய்திகள்

அபிஷேக்கை சரியாக புரிந்து கொண்டு கலாய்க்க தொடங்கும் போட்டியாளர்கள்: இனி சூடுபிடிக்கும் பிக்பாஸ்

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போட்டியாளரான அபிஷேக் வலுக்கட்டாயமாக ஒவ்வொரு போட்டியாளரும் சென்று தன்னுடைய கருத்தை தெரிவித்து வரும் நிலையில் ஆரம்பத்தில் அவரை பெரிய புத்திசாலி என்று நினைத்த போட்டியாளர்கள் கூட தற்போது அவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது வந்து கொண்டிருக்கிற புரமோ வீடியோக்களில் இருந்து தெரியவருகிறது.

பிக்பாஸ் வீட்டில் தான் ஒரு ஹீரோ போல் இருக்க வேண்டும் என்றும், அனைத்து புரமோவிலும் வரவேண்டும் என்றும் அவர் நினைத்து செயல்பட்டு வருகிறார். மேலும் ஒவ்வொரு போட்டியாளரையும், இன்னொரு போட்டியாளருடன் சிண்டு முடிவது, தன்னை முன்னிலைப்படுத்தியே காட்டிக் கொள்வது என நெகட்டிவ் வேலைகளை செய்து வருவதை அடுத்து பார்வையாளர்கள் அவரை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர்.

கடந்த வாரம் அவர் தான் கடைசி இடத்தில் இருந்ததாகவும் ஆனால் பிக்பாஸ் குழுவினர் அபிஷேக் நன்றாக கண்டெண்ட் கொடுப்பதால்அவரை வெளியேற்றவில்லை என்றும் அவருக்கு பதிலாக நாடியாவை வெளியேறி விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது அபிஷேக்கை சரியாக புரிந்துகொண்டு அவரை ஒதுக்கி வருகின்றனர். ஆனால் நிரூப் மற்றும் பிரியங்கா மட்டுமே அபிஷேக்குடன் நெருக்கமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரியங்காவுக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டு வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வார பஞ்சதந்திர டாஸ்க்கில் காயின்களை கைப்பற்றி தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென அபிஷேக் எடுக்கும் பகீரத முயற்சி ஆரம்பத்தில் ஓரளவு ஒர்க் அவுட் ஆனாலும் தற்போது அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர் பேசுவதை பார்த்து அனைவரும் கலாய்க்க விட்டனர். குறிப்பாக சிபி அபிஷேக்கை பார்த்து நீ போயிட்டா பிக்பாஸ் வீடே அழுவாங்கடா என்று கூறியது கலாய்ப்பின் உச்சகட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version