சினிமா செய்திகள்

என்கிட்டயே சேலஞ்ச் பண்றானா? வருணை குறிவைக்கும் அபிஷேக்!

Published

on

என்கிட்டயே சேலஞ்ச் பண்றானா? என வருணை குறிவைத்து நான் காய் நகர்த்தும் காட்சிகள் இன்றைய பிக்பாஸ் இரண்டாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவரான அபிஷேக் ஒவ்வொரு முறையும் ஒரு போட்டியாளரை குறிவைத்து அவருக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவரது குறியில் சிக்கியவர் வருண் என்று தெரிகிறது.

வருண் தன்னிடம் சவால் விட்டதாகவும், என்னிடமே சவால் விடுகிறானா என்றும் புலம்பும் அபிஷேக், அவனை டாப் 5ல் வர விடக்கூடாது என்று பாவனியிடம் அபிஷேக் கூறுகிறார். மேலும் டாப் 5ல் நீயும் நானும் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் வருண் தன்னுடைய விளையாட்டை விளையாடுகிறான், அவனைப் பற்றி நீ ஏன் யோசிக்கிறாய்? நீ உன்னுடைய விளையாட்டை விளையாடு என்று ஸ்ருதி கூற க் அதற்கு அபிஷேக் அதெல்லாம் முடியாது, வருண் வரக்கூடாது என்று மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்கும்போது ஒரு பக்கம் காமெடியாகவும் இன்னொரு பக்கம் வேதனையாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நாமினேஷன் செய்யப்பட்டுள்ள 9 போட்டியாளர்களில் அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version