சினிமா செய்திகள்

நமிதாவின் அரை மணி நேர கதையை அப்படியே ஒளிபரப்பிய விஜய் டிவி!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களையும், சந்தித்த சவால்களையும் கூறி வருகின்றனர். பெரும்பாலான பெண் போட்டியாளர்கள் தங்களுடைய கதையை சொல்லும்போது கண்ணீர் வரவழைக்கும் வகையில் கூறி வருகின்றனர். இமான் அண்ணாச்சி போன்றவர்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களையும் சுவராசியமாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திருநங்கை நமீதா மாரிமுத்து தன்னுடைய கதையை கூற வந்தார். தான் திருநங்கையாக மாறுவதற்கு முன்பாக பெற்றோர்களால் மிகவும் அன்பாக வளர்க்கப்பட்டதாகவும் ஆனால் தன்னுடைய உடலில் மாற்றம் வந்தது என்று தெரிந்ததும் சமூகத்திற்கு பயந்து தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வெறுத்து ஒதுக்கினார்கள் என்றும் அடித்து துன்புறுத்தினார்கள் என்றும் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உடலில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக தனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை தன்னை மற்றவர்கள் புரிந்து கொள்ளாதது, குறிப்பாக பெற்றோர்கள் புரிந்து கொள்ளாமல் தன்னை கொடுமைப் படுத்தியது ஆகியவற்றை மிகவும் அழுது கொண்டே கூறினார். இது நமிதாவின் கதை என்று கூற முடியாது என்றும், ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் இதே போன்ற ஒரு நிலைதான் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் புரிய வைத்தார்.

இந்த நிலைக்கு காரணம் முழுக்க முழுக்க எங்களது பெற்றோர்களே என்றும் எங்களை படிக்க மட்டும் வையுங்கள் போதும் அதன் பிறகு நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்வோம் என்றும் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டது அனைவரையும் பிரியங்கா உள்பட அனைவரையும் கண்ணீர் விட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நமீதா பேசிய அரை மணி நேரம் கண்ணீர் பேச்சை ஒரு நிமிடம் கூட எடிட் செய்யாமல் விஜய் டிவி ஒளிபரப்பியது ஒட்டுமொத்த திருநங்கைகளில் வலியை அனைவரும் உணர வைக்கும் வகையில் இருந்துள்ளது என்பதை அடுத்து விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version