சினிமா செய்திகள்

முதல் நாளில் கலகலப்பு, 2வது நாளே அழுகாச்சி: இசைவாணியின் கண்ணீர் கதை!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் கலகலப்பான சென்ற நிலையில் இன்றைய 2-வது நாள் முழுக்க முழுக்க அழுகாச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் அதிகமாக இருப்பதால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் ஆகிவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் முதல் நபராக வரும் இசைவாணி தன்னுடைய தந்தை துறைமுகத்தில் வேலை பார்த்ததாகவும் ஆனால் அவருக்கு திடீரென வேலை போய் விட்டதால் தங்கள் வீட்டில் கஷ்டமாக இருந்ததாகவும் வாடகை கூட கொடுக்க முடியாமல் ஒவ்வொரு வீடாக மாறியதாகவும் கூறினார்.

மேலும் தனக்கு நல்ல துணிமணிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கும் என்றும் ஆனால் ஒரு நல்ல துணி கூட தன்னிடம் இல்லை என்றும் சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்றும், நான் சாப்பிட வேண்டும் என்பதற்காக அப்பா சாப்பிடாமல் இருந்தார் என்றும் கூறியது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இசைவாணியின் கதையை கேட்ட சக போட்டியாளர்கள் கண்ணீர் சிந்தும் காட்சியோடு இன்றைய முதல் புரோமோ முடிவுக்கு வருகிறது. மேலும் கஷ்டப்படுவோர், கஷ்டப்பட்டு கொண்டு இருக்க மாட்டோம் என்றும் ஒருநாள் நமது வாழ்க்கை நிலை மாறும் என்றும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் இசைவாணி கடைசியில் கூறியதுதான் சூப்பர் பஞ்சாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முதல் புரமோவில் இருந்து இன்றைய நாள் முழுக்க முழுக்க போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அழ வைப்பார்கள் போல தெரிகிறது.

Trending

Exit mobile version