சினிமா செய்திகள்

நீதாண்ட இந்த வேலையை செஞ்சுருப்ப, அபிஷேக் மீது குற்றஞ்சாட்டும் ப்ரியங்கா!

Published

on

இந்த மாதிரி வேலையெல்லாம் நீதாண்டா செஞ்சுருப்ப, என அபிஷேக் மீது பிரியங்கா குற்றஞ்சாட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் அபிஷேக் மற்றும் பிரியங்கா இடையே மோதல் ஏற்படும் காட்சிகள் உள்ளன.

பிரியங்காவை அழைத்த நமிதா டீ காபி குடித்துவிட்டு அதன் கிளாஸ்களை ஆங்காங்கே வைத்து விட்டு போகிறார்கள் என்றும், நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்.

இதனை அடுத்து பிரியங்கா அனைவரிடமும் வந்து டீ காபி குடித்த கிளாஸ்களை தயவு செய்து சிங்க்கில் வையுங்கள் என்றும் அப்பொழுதுதான் பாத்திரம் விளக்க ஏதுவாக இருக்கும் என்று கூறுகிறார்.

அப்போது அனைவரும் ஓகே சொல்ல, அபிஷேக் மட்டும் ’இப்போது தெரியுதா நான் எதற்கு நீ சி எம் ஆக வேண்டும் என்று சொன்னேன் என்று தேவையில்லாமல் வார்த்தையை விடுகிறார். உடனே பிரியங்கா எனக்கு தெரிந்து இவன்தான் அந்த வேலையை செய்திருப்பான், நீதாண்டா செஞ்சுருப்ப, என்று கூற ஆவேசமான அபிஷேக் குறும்படம் போடுங்க பிக் பாஸ், நான் அப்படி செய்யவில்லை என்று கூறுகிறார். இதிலிருந்து இன்றைய நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் அபிஷேக் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version