சினிமா செய்திகள்
இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ்: போலீசில் புகார் அளித்த சனம்ஷெட்டி!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சனம்ஷெட்டி என்பது தெரிந்ததே. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதும், குறைந்த நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள் என்பதும் சனம்ஷெட்டி பெயரில் சமூக வலைத்தளங்களில் ஆர்மிகள் தொடங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சனம் ஷெட்டிக்கு ஒருசில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சனம்ஷெட்டிக்கும் மர்ம நபர் ஒருவர் ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நடிகை சனம் ஷெட்டி சென்னை திருவான்மியூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்
இந்த புகாரை பெற்றுக்கொண்ட திருவான்மியூர் காவல் துறையினர் அந்த புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.