சினிமா செய்திகள்

நீ ரொம்ப ஓவரா போற: தாமரையை எச்சரிக்கும் ராஜூ ஜெயமோகன்!

Published

on

நீ ரொம்ப ஓவராக போகிறாய், இவ்வாறு நீ நடந்து கொண்டால் நீ நியாயமாகவே இருந்தாலும் வெளியே நியாயமாக தெரியாது என தாமரையை எச்சரிக்கும் விதமாக ராஜு ஜெயமோகன் அறிவுரை கூறும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு வாரங்களுக்கும் மேல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் அந்த அன்றைய நிகழ்ச்சியின் மூன்று புரமோ வீடியோக்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றைய 2-வது புரமோ வீடியோவில் தாமரைக்கு அறிவுரை கூறும் வகையில் ஜெயமோகன் கூறும் காட்சிகள் உள்ளன.

கடந்த சில நாட்களாகவே தாமரை கொஞ்சம் ஓவராகவே பேசி வருகிறார் என்பதும், என்ன பேசுகிறேன் என்பதே புரியாமல் பேசி வருகிறார் என்பதும், குறிப்பாக சுருதியுடன் அவர் விளையாட்டை புரிந்து கொள்ளாமல் பேசியது சுருதி மற்றும் பாவனியை ரொம்பவே மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென குறுக்கே புகுந்து சம்பந்தமில்லாமல் பேசுவதும் தாமரையின் வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதனை அடுத்து ஜெயமோகன் அவருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக கூறுகிறார்.

நீ அப்பாவியாக ரொம்ப யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப ஓவராக போகிறாய். இவ்வாறு நடந்துகொண்டால் நியாயமாகவே நீ நடந்து கொண்டாலும் வெளியே நியாயமாக தெரியாது. எதற்கெடுத்தாலும் வெளியே போக போகிறேன், கதவை திறந்து விடுங்கள் என்று சொல்வதை முதலில் நிறுத்து. கேம் என்றால் என்ன என்று முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்’ என்று அறிவுரை கூறுகிறார். இந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் தாமரை ஒழுங்காக விளையாடுவாரா? அல்லது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version