சினிமா செய்திகள்

பிக்பாஸ் முடிந்தவுடன் ஜனவரியில் மீண்டும் ஒரு பிக்பாஸ்: விஜய் டிவி அறிவிப்பு!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் ஜனவரி இறுதியில் மீண்டும் ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் அதன் பின் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த ஞாயிறு அன்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் மொத்தம் 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது உள்ள எட்டு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதும் அந்த நால்வரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனவரி 2-வது வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜனவரி நான்காவது வாரத்தில் பிக் பாஸ் தமிழ் ஓடிடி என்ற நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போட்டியில் 12 அல்லது 13 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் சீசன் 1ல் இருந்து சீசன் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் பங்கு பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டைட்டில் பட்டம் பெற்றவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை 42 நாட்கள் மட்டும் நடைபெறும் என்றும் இந்த நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பப்படுமா? அல்லது எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுமா? என்பது குறித்த தகவல் இன்னும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தமிழில் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version