சினிமா செய்திகள்

எங்களை யாரும் அப்படி பாக்காதீங்க: கதறி அழுத பிக்பாஸ் நமிதா!

Published

on

திருநங்கைகளை எல்லோரும் பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் தான் பார்க்கின்றனர் என்றும், தயவு செய்து எங்களை யாரும் அப்படி பார்க்காதீர்கள் என்றும் நாங்கள் மாறி விட்டோம் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து கூறியது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது நாள் நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா கூறியதாவது:

எங்கள் அம்மா என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி சொல்லி வளர்த்தார்கள். யாரிடமாவது ஒரு குறை இருந்தால் அதை குறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் என்னிடம் ஒருமுறை ஏற்பட்டதும் என்னை வெறுத்து ஒதுக்கினார்கள்.

என்னை அடி அடியென்று அடித்தார்கள், என்னுடைய உடம்பெல்லாம் மரத்துப் போய்விட்டது. என்னை எனது அம்மா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால்தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். சமுதாயத்தில் திருநங்கைகள் தற்போது மாறிவிட்டார்கள். எங்களை எல்லோரும் பிச்சை எடுப்பவர்களும் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் தான் பார்க்கிறார்கள். தயவு செய்து நாங்கள் மாறிவிட்டோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள் நீங்களும் மாறிவிடுங்கள் என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியது பெரும் கண்ணீர் வரவழைக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version